Thursday, July 3, 2008
கிறுக்கனின் உளரல்கள்........
சிரிப்பு
-------------
அழகானது
குழந்தையின் சிரிப்பு!!!
அபூர்வமானது
ஏழையின் சிரிப்பு!!!
அசிங்கமானது
ஆணவ சிரிப்பு!!!
ஆரவாரமானது
நண்பர்களின் சிரிப்பு!!!
---------------------------------------------------------------------------
எல்லோர்க்கும் புது வருடம்
ஜனவரி ஒன்று
ஒவ்வொருவருக்கும் புது வருடம்
அவரவர் பிறந்த நாள்.....
--------------------------------------------------------------------------------
காதல் மழை
அவள் கண்ணில் கண்ணீர்
காதல் சிரிப்பு
அவள் உதட்டில் மெல்லிய சிரிப்பு
காதல் சத்தம்
அவள் கொலுசின் சத்தம்
காதல் பார்வை
அவள் ஓர பார்வை
காதல் பரிசு
அவள் முத்தம்
----------------------------------------------------------------------------------
அழகே
உன்னை நிலவுடன்
ஒப்பிட மாட்டேன்
ஏனென்றால்,
நிலவை காணலம்
ஆனால் அடையமுடியாது....
------------------------------------------------------------------
பணம் இன்று உன்னிடம்
நாளை மற்றவரிடம்
ஆனால் மனம் என்றும் உன்னிடம்
----------------------------------------------------------------------
வாழ்க்கை
புரிந்தவனுக்கு அது சொர்க்கம்
புரியாதவனுக்கு அது நரகம்
--------------------------------------------------------------------------
நட்பின் ஆரம்பம் சிரிப்பு
சிரிப்பின் ஆரம்பம் பண்பு
பண்பின் ஆரம்பம் பழக்கவழக்கம்
பழக்கவழக்கத்தின் ஆரம்பம் பெற்றோரில்...
---------------------------------------------------------------------------
ஆயிரம் விண்மீன்களுக்கு மத்தியில்
அழகாக தெரிவது நிலா
அதுபோல் லட்சம் பெண்களுக்கு மத்தியில்
அழகானவள் நீ ...............
-----------------------------------------------------------------------------
விண்ணிலும் உன்னை கண்டேன்மண்ணிலும் உன்னை கண்டேன்என் மனதிலும் உன்னை கண்டேன்யாரடி நீ அவள் எனக்கு...
--------------------------------------------------------------------------------
நம் இரு கண்களில் ஒரு கண்ணை இழந்தால்
பாதிப்பு மற்ற கண்ணுக்கும்நமது பார்வைக்கும்.....
அது போல நம் வாழ்வில் தாயும் தந்தையும்....
-------------------------------------------------------------------------------------
இந்த மண்ணில் உன்னை கண்ட நாள்
எனக்கு கார்த்திகை திருநாள்
நீ எனக்கு சம்மதம் கொடுத்த நாள்
எனக்கு தை திருநாள்
நாம் பெற்றோர் சம்மதம் கொடுத்த நாள்
எனக்கு சித்திரை திருநாள்
நான் உன்னை கரம் பிடித்த நாள்
எனக்கு சித்திரை திருவிழா...
----------------------------------------------------------------------------
Wednesday, July 2, 2008
மழைத்துளியில் ஒரு மழலை
காலையில சீக்கரமே எழுந்து அலுவலகத்திற்கு அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் ரகு....
"மாலா சாப்பாடு தயாரா"
என்று குரல் கொடுத்துக் கொண்டே சாப்பாட்டு மேஜைக்கு சென்றான்...
ரெடிங்க.... என்ன இன்னைக்கு சீக்கரம் கிளம்பிட்டீங்க??....
கொஞ்சம் வேலை இருக்குமா அதான்...
அப்போ இன்னைக்கு நான்தான் மலர பள்ளில விடனுமா.... அப்போ சீக்கரம் வேலையெல்லாம் முடிக்கனும்... மழையா வேற இருக்கு....
இன்னைக்கு ஒரு நாள்டா நாளையில இருந்து நான் பார்த்துக்கிறேன்...
சரி சரி நான் பார்த்துக்கிறேன் நீங்க நல்லா சாப்பிடுங்க...
மலர் எழுந்தாச்சா..... மாலா!!!!
இல்லைங்க நல்லா தூங்கிட்டு இருக்கா!!!
சரி தூங்கட்டும் விடு....
"அப்பா அப்பா"
மலர் குரல் கொடுத்துக்கிட்டே ரகுவிடம் வர!!!
மலர் குட்டி வாடா வா.....
அப்பா கிளம்பிட்டீங்களா???
ஆமாம்டா அப்பாக்கு வேலை இருக்கு......
அப்போ நான் எப்படி ஸ்கூளுக்கு போவேன்???
இன்னைக்கு அம்மா கூட போடா...நாளைக்கு நான் கூட்டிட்டு போறேன்,,,
அய்யோ அப்பா!! "அம்மா போர்ப்பா நடந்தே கூட்டிட்டுப் போவாங்க" நீங்க ஜாலியா வண்டில கூட்டிட்டுப்போவிங்க...
ஏன்டீ நான் உனக்கு போரா???... வாய் ஜாஸ்த்தி ஆகிடுச்சி உனக்கு..
என மாலா செல்லமாய் கண்டிக்க ...
பாருங்கப்பா அம்மாவை மிரட்டுராங்க....
மலர் சிணுங்கியதும்..
என் செல்லத்த திட்டாதே... இன்னைக்கு மலர ஆட்டோல கூட்டிட்டு போ சரியா,...
என்ன மலர் குட்டி ஓக்கே தானே உனக்கு...
ம்ம் சரிப்பா அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்...
செல்லக்குட்டிடா நீ.......
அப்பா இன்னைக்கு டீவில வருவீங்களா???..
ம்ம் வருவேன்டா, மழைக்காலம்ல... வானிலை அறிக்கை சொல்ல கூப்பிடுவாங்க....
அப்போ அப்பா இன்னும் இரண்டு நாளைக்கு நல்ல மழைபெய்யும்ன்னு சொல்லுங்கப்பா...
ஏன்டாக் குட்டி உனக்கு மழைனா அவளோ பிடிக்குமா...
இல்லப்பா என் பிரண்ட் தீபா வீட்ல மழை பெய்தா தண்ணீ ஒழுகுதாம்...அவங்க அப்பா சரி செய்ய இரண்டு நாள் ஆகும்ன்னு சொன்னாங்கலாம் அதான் நீங்க மழை வரும்ன்னு டீவில சொன்னா அன்னைக்கு மழையே வராதுல
அதான் அப்படி சொல்லச்சொன்னேன்.... மறக்காம சொல்லிடுங்க...
மலர் சொன்னதைக்கேட்டு ரகுவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வாய் அடைத்துப் போய் நின்றான்!!!.
"மாலா சாப்பாடு தயாரா"
என்று குரல் கொடுத்துக் கொண்டே சாப்பாட்டு மேஜைக்கு சென்றான்...
ரெடிங்க.... என்ன இன்னைக்கு சீக்கரம் கிளம்பிட்டீங்க??....
கொஞ்சம் வேலை இருக்குமா அதான்...
அப்போ இன்னைக்கு நான்தான் மலர பள்ளில விடனுமா.... அப்போ சீக்கரம் வேலையெல்லாம் முடிக்கனும்... மழையா வேற இருக்கு....
இன்னைக்கு ஒரு நாள்டா நாளையில இருந்து நான் பார்த்துக்கிறேன்...
சரி சரி நான் பார்த்துக்கிறேன் நீங்க நல்லா சாப்பிடுங்க...
மலர் எழுந்தாச்சா..... மாலா!!!!
இல்லைங்க நல்லா தூங்கிட்டு இருக்கா!!!
சரி தூங்கட்டும் விடு....
"அப்பா அப்பா"
மலர் குரல் கொடுத்துக்கிட்டே ரகுவிடம் வர!!!
மலர் குட்டி வாடா வா.....
அப்பா கிளம்பிட்டீங்களா???
ஆமாம்டா அப்பாக்கு வேலை இருக்கு......
அப்போ நான் எப்படி ஸ்கூளுக்கு போவேன்???
இன்னைக்கு அம்மா கூட போடா...நாளைக்கு நான் கூட்டிட்டு போறேன்,,,
அய்யோ அப்பா!! "அம்மா போர்ப்பா நடந்தே கூட்டிட்டுப் போவாங்க" நீங்க ஜாலியா வண்டில கூட்டிட்டுப்போவிங்க...
ஏன்டீ நான் உனக்கு போரா???... வாய் ஜாஸ்த்தி ஆகிடுச்சி உனக்கு..
என மாலா செல்லமாய் கண்டிக்க ...
பாருங்கப்பா அம்மாவை மிரட்டுராங்க....
மலர் சிணுங்கியதும்..
என் செல்லத்த திட்டாதே... இன்னைக்கு மலர ஆட்டோல கூட்டிட்டு போ சரியா,...
என்ன மலர் குட்டி ஓக்கே தானே உனக்கு...
ம்ம் சரிப்பா அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்...
செல்லக்குட்டிடா நீ.......
அப்பா இன்னைக்கு டீவில வருவீங்களா???..
ம்ம் வருவேன்டா, மழைக்காலம்ல... வானிலை அறிக்கை சொல்ல கூப்பிடுவாங்க....
அப்போ அப்பா இன்னும் இரண்டு நாளைக்கு நல்ல மழைபெய்யும்ன்னு சொல்லுங்கப்பா...
ஏன்டாக் குட்டி உனக்கு மழைனா அவளோ பிடிக்குமா...
இல்லப்பா என் பிரண்ட் தீபா வீட்ல மழை பெய்தா தண்ணீ ஒழுகுதாம்...அவங்க அப்பா சரி செய்ய இரண்டு நாள் ஆகும்ன்னு சொன்னாங்கலாம் அதான் நீங்க மழை வரும்ன்னு டீவில சொன்னா அன்னைக்கு மழையே வராதுல
அதான் அப்படி சொல்லச்சொன்னேன்.... மறக்காம சொல்லிடுங்க...
மலர் சொன்னதைக்கேட்டு ரகுவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வாய் அடைத்துப் போய் நின்றான்!!!.
Tuesday, July 1, 2008
கிறுக்கனின் கிறுக்கல்கள்....
உன் புன்னகையை கண்டேன் வெண்மேகம் மறந்தேன் உன் சுவாசம் உணர்ந்தேன் தென்றலை மறந்தேன் உன் விழியை கண்டேன் நிலவின் ஒளியை மறந்தேன் உன்னையே கண்டேன் நான் என்னை மறந்தேன்
--------------------------------------------------------------------------------------
சித்திரையில் உன்னை கண்டேன் நித்திரையை நான் மறந்தேன் என் வாழ்வில்...
------------------------------------------------------------------------------------
தண்டவாளத்தில் தலை சாய்த்து பூத்திருக்கும்
ஓர் ஒற்றை ரோஜா என் காதல் ,
காதலே நீ நடந்து வருகிறாயா
இல்லை ரயிலில் வருகிறாயா
-----------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------
சித்திரையில் உன்னை கண்டேன் நித்திரையை நான் மறந்தேன் என் வாழ்வில்...
------------------------------------------------------------------------------------
தண்டவாளத்தில் தலை சாய்த்து பூத்திருக்கும்
ஓர் ஒற்றை ரோஜா என் காதல் ,
காதலே நீ நடந்து வருகிறாயா
இல்லை ரயிலில் வருகிறாயா
-----------------------------------------------------------------------------------
என் வாழ்வில் வசந்தமாய் வருவாய் என காத்திருந்திருந்தேன் நான்
வந்தாய் நீ வசந்தமாய் அல்ல
புயலாய் மண வாழ்த்துடன்
----------------------------------------------------------------------------------------
மொழியை போன்றவள் தாய்
மொழிகளின் முதல் எழுத்து "அ "
உயிரின் முதல் எழுத்தும் அதுவே...
-----------------------------------------------------------------------------------------
தாகம் போன்றது நம் நட்பு ஏனென்றால்
தண்ணீர் அழிந்தாலும் தாகம் தீராது
-----------------------------------------------------------------------------------------
Subscribe to:
Posts (Atom)