Tuesday, July 1, 2008

கிறுக்கனின் கிறுக்கல்கள்....

உன் புன்னகையை கண்டேன் வெண்மேகம் மறந்தேன் உன் சுவாசம் உணர்ந்தேன் தென்றலை மறந்தேன் உன் விழியை கண்டேன் நிலவின் ஒளியை மறந்தேன் உன்னையே கண்டேன் நான் என்னை மறந்தேன்

--------------------------------------------------------------------------------------
சித்திரையில் உன்னை கண்டேன் நித்திரையை நான் மறந்தேன் என் வாழ்வில்...

------------------------------------------------------------------------------------
தண்டவாளத்தில் தலை சாய்த்து பூத்திருக்கும்
ஓர் ஒற்றை ரோஜா என் காதல் ,
காதலே நீ நடந்து வருகிறாயா
இல்லை ரயிலில் வருகிறாயா

-----------------------------------------------------------------------------------

என் வாழ்வில் வசந்தமாய் வருவாய் என காத்திருந்திருந்தேன் நான்

வந்தாய் நீ வசந்தமாய் அல்ல

புயலாய் மண வாழ்த்துடன்

----------------------------------------------------------------------------------------


மொழியை போன்றவள் தாய்

மொழிகளின் முதல் எழுத்து "அ "

உயிரின் முதல் எழுத்தும் அதுவே...

-----------------------------------------------------------------------------------------

தாகம் போன்றது நம் நட்பு ஏனென்றால்

தண்ணீர் அழிந்தாலும் தாகம் தீராது

-----------------------------------------------------------------------------------------

No comments: