Wednesday, July 2, 2008

மழைத்துளியில் ஒரு மழலை

காலையில சீக்கரமே எழுந்து அலுவலகத்திற்கு அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் ரகு....

"மாலா சாப்பாடு தயாரா"

என்று குரல் கொடுத்துக் கொண்டே சாப்பாட்டு மேஜைக்கு சென்றான்...
ரெடிங்க.... என்ன இன்னைக்கு சீக்கரம் கிளம்பிட்டீங்க??....

கொஞ்சம் வேலை இருக்குமா அதான்...

அப்போ இன்னைக்கு நான்தான் மலர‌ பள்ளில விடனுமா.... அப்போ சீக்கரம் வேலையெல்லாம் முடிக்கனும்... மழையா வேற‌ இருக்கு....

இன்னைக்கு ஒரு நாள்டா நாளையில இருந்து நான் பார்த்துக்கிறேன்...
சரி சரி நான் பார்த்துக்கிறேன் நீங்க நல்லா சாப்பிடுங்க...

மலர் எழுந்தாச்சா..... மாலா!!!!

இல்லைங்க நல்லா தூங்கிட்டு இருக்கா!!!

சரி தூங்கட்டும் விடு....

"அப்பா அப்பா"
மலர் குரல் கொடுத்துக்கிட்டே ர‌குவிட‌ம் வ‌ர‌!!!
மலர் குட்டி வாடா வா.....

அப்பா கிளம்பிட்டீங்களா???

ஆமாம்டா அப்பாக்கு வேலை இருக்கு......
அப்போ நான் எப்படி ஸ்கூளுக்கு போவேன்???

இன்னைக்கு அம்மா கூட போடா...நாளைக்கு நான் கூட்டிட்டு போறேன்,,,
அய்யோ அப்பா!! "அம்மா போர்ப்பா நடந்தே கூட்டிட்டுப் போவாங்க‌" நீங்க ஜாலியா வண்டில கூட்டிட்டுப்போவிங்க...

ஏன்டீ நான் உன‌க்கு போரா???... வாய் ஜாஸ்த்தி ஆகிடுச்சி உனக்கு..
என‌ மாலா செல்ல‌மாய் க‌ண்டிக்க‌ ...

பாருங்க‌ப்பா அம்மாவை மிர‌ட்டுராங்க‌....
மல‌ர் சிணுங்கிய‌தும்..

என் செல்ல‌த்த திட்டாதே... இன்னைக்கு ம‌ல‌ர‌ ஆட்டோல‌ கூட்டிட்டு போ ச‌ரியா,...

என்ன ம‌ல‌ர் குட்டி ஓக்கே தானே உன‌க்கு...
ம்ம் ச‌ரிப்பா அட்ஜ‌ஸ்ட் பண்ணிக்குறேன்...

செல்லக்குட்டிடா நீ.......
அப்பா இன்னைக்கு டீவில‌ வ‌ருவீங்க‌ளா???..

ம்ம் வ‌ருவேன்டா, ம‌ழைக்கால‌ம்ல‌... வானிலை அறிக்கை சொல்ல‌ கூப்பிடுவாங்க‌....

அப்போ அப்பா இன்னும் இர‌ண்டு நாளைக்கு ந‌ல்ல‌ ம‌ழைபெய்யும்ன்னு சொல்லுங்க‌ப்பா...

ஏன்டாக் குட்டி உன‌க்கு ம‌ழைனா அவ‌ளோ பிடிக்குமா...

இல்ல‌ப்பா என் பிரண்ட் தீபா வீட்ல‌ ம‌ழை பெய்தா த‌ண்ணீ ஒழுகுதாம்...அவ‌ங்க‌ அப்பா ச‌ரி செய்ய இர‌ண்டு நாள் ஆகும்ன்னு சொன்னாங்கலாம் அதான் நீங்க‌ ம‌ழை வரும்ன்னு டீவில சொன்னா அன்னைக்கு ம‌ழையே வ‌ராதுல

அதான் அப்ப‌டி சொல்ல‌ச்சொன்னேன்.... ம‌ற‌க்காம‌ சொல்லிடுங்க...
ம‌ல‌ர் சொன்னதைக்கேட்டு ரகுவிற்கு என்ன‌ சொல்வதென்று தெரியாமல் வாய் அடைத்துப் போய் நின்றான்!!!.

No comments: